உக்ரைனுக்கு உதவிகளை அள்ளித் தரும் அமெரிக்கா: வெளியான மொத்தத் தொகை


உக்ரைனுக்கு மேலும் 100 மில்லியன் டொலர் பெருமதியான ஆயுதங்களை வழங்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் நால்வர் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், இதுவரை 3.4 பில்லியன் டொலர் பெருமதியான ஆயுதங்களை அமெரிக்க நிர்வாகம் உக்ரைனுக்கு அளித்துள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன் 100 மில்லியன் டொலர் அளவிலான ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளிக்க உள்ள நிலையில், நவீன ஆயுதங்களும் அதில் உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் உக்ரைனுக்கு 33 பில்லியன் டொலர் அளவுக்கு உதவியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்மொழிந்தார், இதில் 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான இராணுவ உதவியும் அடங்கும்.

மட்டுமின்றி, அமெரிக்காவின் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சியானது உக்ரைன் வீரர்களுக்கு அளித்து வருகின்றனர்.
மேலும், ஜோ பைடன் உட்பட ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக உக்ரைனுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் மீண்டும் உறுதியளித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.