உடுப்பி : ஐந்து ஆண்டுக்கு பின் ஆந்திர வாலிபர் குடும்பத்துடன் இணைந்தார்.ஆந்திராவை சேர்ந்தவர் போகி பிரசாத், 25. இவர் குடும்பத்துடன் கூலி வேலை தேடி, கர்நாடகா வந்தார். பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்தவர் ஐந்து ஆண்டுக்கு முன் திடீரென காணாமல் போனார்.உடுப்பியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடமாடி வந்தார்.
இதை பார்த்த சமூக ஆர்வலர் விஷு ஷெட்டி, 45 என்பவர், இரண்டரை ஆண்டுக்கு முன் அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார். அப்போது பேச முடியாத நிலையில் இருந்ததால், அவரது விலாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.சில நாட்களுக்கு முன் நன்கு குணமடைந்த அவர், தன் விலாசத்தை தெரிவித்தார்.
இதையடுத்து தன் நண்பர்கள், போலீசார் மூலம் அவரது குடும்பத்தினர் எங்குள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டது.பின் அவரை, விஷு ஷெட்டி குடும்பத்தினருடன் கொண்டு போய் சேர்த்தார். ஐந்து ஆண்டுக்கு பின் மகனை பார்த்த தாய் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடுப்பி : ஐந்து ஆண்டுக்கு பின் ஆந்திர வாலிபர் குடும்பத்துடன் இணைந்தார்.ஆந்திராவை சேர்ந்தவர் போகி பிரசாத், 25. இவர் குடும்பத்துடன் கூலி வேலை தேடி, கர்நாடகா வந்தார். பல்வேறு பகுதிகளில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.