ஐந்து ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த ஆந்திர வாலிபர்| Dinamalar

உடுப்பி : ஐந்து ஆண்டுக்கு பின் ஆந்திர வாலிபர் குடும்பத்துடன் இணைந்தார்.ஆந்திராவை சேர்ந்தவர் போகி பிரசாத், 25. இவர் குடும்பத்துடன் கூலி வேலை தேடி, கர்நாடகா வந்தார். பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்தவர் ஐந்து ஆண்டுக்கு முன் திடீரென காணாமல் போனார்.உடுப்பியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடமாடி வந்தார்.

இதை பார்த்த சமூக ஆர்வலர் விஷு ஷெட்டி, 45 என்பவர், இரண்டரை ஆண்டுக்கு முன் அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார். அப்போது பேச முடியாத நிலையில் இருந்ததால், அவரது விலாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.சில நாட்களுக்கு முன் நன்கு குணமடைந்த அவர், தன் விலாசத்தை தெரிவித்தார்.

இதையடுத்து தன் நண்பர்கள், போலீசார் மூலம் அவரது குடும்பத்தினர் எங்குள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டது.பின் அவரை, விஷு ஷெட்டி குடும்பத்தினருடன் கொண்டு போய் சேர்த்தார். ஐந்து ஆண்டுக்கு பின் மகனை பார்த்த தாய் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.