ஐபிஎல்: லக்னோவிற்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி இன்று இரண்டாவதாக நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.  அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 
லக்னோ அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே போல கொல்கத்தா அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.