கணவன் அடித்து துன்புறுத்தியதால் என்னால் வாசனையை உணர முடியவில்லை: நடிகை கவலை

மும்பை: கணவன் அடித்து துன்புறுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பில், என்னால் வாசனையை உணர முடியவில்லை என்று நடிகை பூனம் பாண்டே கூறினார்.பாலிவுட் ஆபாச நடிகையும், மாடல் அழகியுமான பூனம் பாண்டே, சமீபத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எனது கணவர் சாம் பாம்பேவால் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளானேன். பலமுறை என்னைக் கொல்ல முயன்றார். அதனால் ஏற்பட்ட பாதிப்பால் என்னால் வாசனையை கூட உணர முடியவில்லை. என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் வாசனையைப் பற்றி கேட்க வேண்டிய நிலையில் உள்ளேன். மருத்துவரிடம் கேட்டபோது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார். இத்தனை பிரச்னைகளுக்கும் மத்தியில் நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் வலுவாக இருக்கிறேன்’ என்றார். முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் பூனம் பாண்டேவுக்கும், சாம் பாம்பேவுக்கும் திருமணம் நடந்தது. அடுத்த சில வாரங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பின், குடும்ப வன்முறை வழக்கில் சாம் பாம்பே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.