ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி வேலை முடிந்து வந்த இவரை மர்ம நபர்கள் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவரதுமனைவிக்கு அவருடன் பணியாற்றும் மாரீஸ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் அவருடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு கோபால் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்து கூலி படை ஏவி கொலை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.