கழுதை கழுதையாக தான் இருக்கும்; இம்ரான் பேச்சு: இணையதளவாசிகள் கிண்டல்| Dinamalar

இஸ்லாமாபாத்: தன்னை கழுதையுடன் ஒப்பிட்டு பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவி இழந்த பிறகு, நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்நிலையில், பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இம்ரான் கான் பேசிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இம்ரான் கான் பேசியுள்ளதாவது: பிரிட்டனில் எனக்கு மிகவும் வரவேற்பு இருந்தது. ஆனால், ஒரு போதும், அந்நாட்டை எனது தாய்வீடாக கருதியது இல்லை. முதலில், நான் எப்போதும் பாகிஸ்தானி. ஒரு கழுதை உடலில் கோடுகள் போடுவதன் மூலம், அது குதிரையாகிவிடாது. ஒரு கழுதை கழுதையாக தான் இருக்கும். இவ்வாறு இம்ரான் கான் பேசியுள்ளார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள், இம்ரான் கானை கிண்டல் செய்து வருகின்றனர். பலர் மீம்களை வெளியிட்டு, இம்ரான் கானை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.