கியூபாவில் காஸ் கசிந்து | Dinamalar

ஹவானா:வட அமெரிக்க நாடான கியபாவில், ஹோட்டலில் காஸ் கசிந்து ஏற்பட்ட விபத்தில், நான்கு பேர் இறந்தனர், பலர் காயம் அடைந்தனர்.
கியூபா தலைநகர் ஹவானாவில், ௧௯ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடம் ஒன்றில், ‘ சரடோகா’ என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. ௯௬ அறைகள் அடங்கிய இந்த ஹோட்டல் நேற்று காலை வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.அப்போது, ஹோட்டலில் பயங்கர வெடி சத்தம் கேட்டது.

அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு, மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு நான்கு பேர் இறந்தனர்,. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. ஹோட்டலில் சமையல் காஸ் கசிந்ததால், இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.