குண்டாகும் இந்தியர்கள் : ஆய்வில் தகவல்| Dinamalar

புதுடில்லி: உடல் நல பருமனால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என தேசிய குடும்ப நலத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உடல் பருமானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேசிய அளவில், கடந்த நான்கு ஆண்டுகளில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19ல் இருந்து 23 சதவீதம் ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 21ல் இருந்து 24 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது. கேரளா, அந்தமான், ஆந்திரா, கோவா, சிக்கிம், மணிப்பூர், டில்லி, தமிழகம், புதுச்சேரி, பஞ்சாப், சண்டிகர் மற்றும் லட்சத்தீவில் 3ல் ஒரு பங்குக்கும் மேலான பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில், பெண்கள் கருவுறுதல் விகிதம் 2.2ல் இருந்து 2. ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக கருவுதல் விகதம் பீஹாரில் 2.98 சதவீதமாகவும், மேகாலாயாவில் 2.91 சதவீதம் ஆகவும், உ.பி.,யில் 2.35 சதவீதமாகவும், ஜார்கண்டில் 2.26 சதவீதமாகவும், மணிப்பூரில் 2.17 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.