குளவி கொட்டி பெண் பலி| Dinamalar

புதுச்சேரி : நெட்டப்பாக்கம் அருகே குளவி கொட்டியதில் பெண் உயிரிழந்தார்.கோவை மாவட்டம்கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜி, 59; மரம் ஏறும் தொழிலாளி யான இவர், புதுச்சேரி மாநிலம், பண்டசோழநல்லுாரில் பாஸ்கரன் என்பவரின் தென்னந்தோப்பை குத்ததை எடுத்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்

.இவரது மனைவி மாரியம்மாள், 54; கடந்த 5ம் தேதி காலை தேங்காய் எடுத்து வரச் சென்றபோது, அங்கு கூடு கட்டியிருந்த செங்குளவிகள் மாரியம்மாளை சரமாரியாக கொட்டியது.அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஓடிச் சென்று, குளவிகளை விரட்டி, மாரியம்மாளை மீட்டு நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் காலை இறந்தார்.இதுகுறித்து அவரது கணவர் ராஜி அளித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.