சென்னையில் ஆயுதப்படை காவலர் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே ஆயுதப்படை காவலர் சரவணக்குமார், மத்திய அரசு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் அதிகமாக பணத்தை இழந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன் சரவணக்குமாருக்கு திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.