#சென்னை || துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவலர்.!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். தற்போது, அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று சரவணகுமார் பணியில் இருக்கும்போதேதன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் சொல்லப்படுகிறது. மேலும் வெளியான தகவலின்படி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட சரவணகுமாரின் உடலை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொன்று வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.