சேலத்தில், பட்டப்பகலில் அதிமுக பிரமுகரின் வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்.!

சேலத்தில், பட்டப்பகலில் அதிமுக பிரமுகரின் வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை பிடித்த மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பிரட்ஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்பவர், அதிமுக இளைஞரணி பொருளாளராக இருந்து வருகிறார்.

இன்று பிற்பகலில் தினேஷ் வெளியே சென்ற நிலையில், அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இளைஞன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் வாணியம்பாடியைச் சேர்ந்த பிரசாந்த் என்பதும் அவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.