சேலத்தில் பட்டப்பகலில் ஜூஸ் கடை முன்பாக உரிமையாளர் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை திருடிச்சென்ற மர்ம நபர்கள்.!

சேலம் ஏற்காடு பகுதியில் பட்டப்பகலில் ஜூஸ் கடை முன்பாக உரிமையாளர் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை திருடிச்சென்ற இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

பிரேம் என்பவர் தான் நடத்தி வரும் ஜூஸ் கடைக்கு ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்து, கடை முன்பாக நிறுத்தி பூட்டிவிட்டு உள்ளே சென்றுார்.

15 நிமிடங்கள் கழித்து வெளியே சென்று பார்த்த போது வண்டி காணாமல் போயிருந்ததையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் 2 நபர்கள் அவரது வண்டியை திருடிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

பிரேம் அளித்த புகாரின் பேரில், இருவரையும் ஏற்காடு போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.