தனியார் நிறுவன அதிகாரி மீது தாக்குதல்| Dinamalar

புதுச்சேரி : தனியார் நிறுவன அதிகாரியை தாக்கிய ஓட்டல் ஊழியர் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்தவர் பால்ராஜி மகன் பத்மநாபன், 33; சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வள அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.கடந்த 13ம் தேதி புதுச்சேரி வந்த அவர், இ.சி.ஆர்., லதா ஸ்டீல் அவுஸ் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உணவு சாப்பிட்டார்.

அப்போது உணவு சேவையில் குறை இருப்பதை பத்ம நாபன் சுட்டிக்காட்டினார்.இதுதொடர்பாக, அவருக்கும், ஓட்டல் ஊழியர் களுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர் அனியா முபி, 35, பத்மநாபனை தாக்கினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், 24ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதுகுறித்து பத்மநாபன் நேற்று கொடுத்த புகாரின்பேரில், ஓட்டல் ஊழியர் அனியா முபி, கடை உரிமையாளர் சாதிக், 30, ஆகியோர் மீது டி.நகர் போலீசார் இரண்டு பிரிவு களில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.