தருமபுரி, திருவள்ளூர், வேலூரில் கோடை வெப்பத்தை குளிர்ச்சியாக்கிய மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவான நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் பலத்த கனமழை பெய்தது. தொடர்மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், சட்டென்று பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. வேலூர் மாவட்டத்தில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்த்தது. இறைவன்காடு, செதுவாலை, கழனிபாக்கம், கே.வி.குப்பம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
image
புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டத்தில் கனமழை பெய்தது. வில்லியனூர், திருக்கனூர், கன்னியக்கோவில், காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. இதேபோன்று, காரைக்கால் நகரப் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.