"திருமணத்துக்கு முன்பே என் அண்ணன் என்னை கொல்ல முயற்சித்தார்" – ஹைதராபாத் பெண்

“மதம் மாறி காதலித்ததால் திருமணத்துக்கு முன்பே எனது சகோதரர் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்” என்று ஹைதராபாதில் ஆணவக் கொலை செய்யப்படவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பட்டியலினத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் கடந்த ஜனவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு சுல்தானாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து யாருக்கும் தெரியாமல் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர்.
image
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுல்தானாவின் சகோதரர் சையது மொபின் மற்றும் அவரது நண்பர் மசூத் அகமது ஆகியோர் நாகராஜை சரமாரியாக தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். நாகராஜ் கொலை செய்யப்படுவதை தடுக்க சுல்தானா எவ்வளவு முயற்சி செய்தபோதிலும், அது பலனளிக்கவில்லை. இதனிடையே, இந்த ஆணவக் கொலை வழக்கில் சையது மொபினையும், மசூத் அகமதையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
image
இந்நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் நேற்று சுல்தானா கூறுகையில், “மதம் மாறி நாகராஜை காதலித்தது எனது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக, எனது சகோதரர் சையது மொபின் தொடர்ந்து என்னை எச்சரித்து வந்தார். ஆனால், என்னால் நாகராஜை மறக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சையது மொபின், வீட்டிலேயே என்னை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ய முயன்றார். அப்போது எனது பெற்றோர் என்னை காப்பாற்றிவிட்டனர். நாகராஜுடன் திருமணமானதும் எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தோம்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.