தீராத வயிற்று வலி.. தற்கொலைக்கு முயன்ற பயிற்சி காவலர்..!

வயிற்று வலி காரணமாக காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கவுண்டர் பட்டியை சேர்ந்தவர் சுபாஷ்.  இவர் திண்டுக்கல்லில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் பயிற்சி பெற்றவரு வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரை அங்கிருந்த காவலர்கள் உடனடியாக மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அவருக்கு குடலிறக்க நோய் காரணமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவர் அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளனர். காவலர் பயிற்சிப் பள்ளியில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.