நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்..!

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனது நண்பர்களுடன் அங்கு இருந்த விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அனைவரும் குளித்து கொண்டிருந்த பொழுது புஷ்பராஜ் திடீரென நீரில் மூழ்கினார்.

அவரின் நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி பலனளிக்கவில்லை. இதுகுறித்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு புஷ்பராஜ் அவர்களை மீட்டனர். தகவலறிந்து இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது நண்பர்கள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.