திருபுவனை : பாகூர் அருகே உள்ள மணமேடு பெரியார் தெருவில் வசிப்பவர் சுந்தரம். இவரது மகன் அபிசுதன், 21; லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக் கல்லுாரியில் பி.எஸ்.சி., சோசியாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.திருபுவனை பெரியபேட், தென்னஞ்சாலை வீதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த அபிசுதன், கடந்த 4ம் தேதி, மதகடிப்பட்டு பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்ட ஏறியுள்ளார்.
மரத்தின் உச்சியில் ஏறும்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அபிசுதனை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அபிசுதன் இறந்தார்.
திருபுவனை : பாகூர் அருகே உள்ள மணமேடு பெரியார் தெருவில் வசிப்பவர் சுந்தரம். இவரது மகன் அபிசுதன், 21; லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக் கல்லுாரியில் பி.எஸ்.சி., சோசியாலஜி முதலாம் ஆண்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.