பட்டப்பகலில் பாரீஸ் நகைக்கடையை ஆயுதங்களுடன் சூறையாடிய கொள்ளையர்கள்


பாரீஸிலுள்ள பிரபல நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் விற்கும் கடை ஒன்றை, நேற்று முன் தினம் பட்டப்பகலில் ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் ஒன்று சூறையாடியது. 

ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் தாக்கப்படவில்லை.

தலையில் ஹெல்மட்டும், முகத்தில் மாஸ்கும் அணிந்த நான்கு பேர் கொண்ட அந்த கும்பலில் ஒருவர் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக பொலிசார் தெரிவிக்க, மற்றவர்களும் தானியங்கி ஆயுதங்கள் வைத்திருந்ததாக சம்பவத்தைக் கண்ணால் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்துவிட்ட அந்தக் கொள்ளையர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தை ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்த விவரம் இன்னமும் வெளியாகவில்லை.

பட்டப்பகலில் பாரீஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.