பாட்னா:
மேற்கு வங்காளத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சிலிகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், கொரோனா அலை முடிந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறுகையில், கொரோனா வைரஸ் பவால் நம் முன் உள்ள மிகப் பெரிய சவால். அதிகரித்து வரும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன்பின்னரே மற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தவேண்டும். கொரோனா வைரஸ் பரவல் தான் மிகவும் முக்கியமானது. குடியுரிமை திருத்தச் சட்டம் அல்ல என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…கொல்கத்தாவில் பாஜக தொண்டர் கொலை- மத்திய அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சிகள் ரத்து