பெண்கள் முகத்தை மறைக்க தலிபான் அரசு உத்தரவு| Dinamalar

காபூல்:’வீட்டுக்கு வெளியே செல்லும்போது, பொது இடங்களில் பெண்கள் முகத்தை துணியால் மறைக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்ப ஆண்கள் கைது செய்யப்படுவர்; அவர்கள் அரசுப் பணியில் இருந்து நீக்கப்படுவர்’ என, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிர்வாகத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்தாண்டு ஆகஸ்டில் கைப்பற்றியது. அது முதல், அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்ல தடை; பள்ளிக்கு செல்ல தடை என, பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் விதித்து வருகின்றது.
அங்கு அமைந்துள்ள தற்காலிக அரசின் ஒழுக்க பராமரிப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், கூறியதாவது:பொது இடங்களில், பெண்கள் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். முழு உடலையும் மறைக்கும் பர்தா அணிவது சிறந்தது.இந்த விதிகளை பெண்கள் மீறினால், அவர்களுடைய தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர் கைது செய்யப்படுவார். அரசுப் பணியில் இருந்து நீக்கப்படுவார். இந்த உத்தரவை கட்டாயம் கடை பிடிக்க, தலிபான் தலைவர் ஹிபாதுல்லா அகுந்த்ஜடா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.