முன்னாள் நீதிபதியின் மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி:”நீதிபதிகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னாள் மாவட்ட நீதிபதி முசாபர் ஹுசைன் என்பவர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்ட நீதிபதியாக பதவி வகித்த போது நிலம் கையகப்படுத்தும் வழக்கில் மனுதாரருக்கு அதிக இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார்.இந்த விவகாரத்தில் நீதிபதி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவரது ஓய்வூதிய உள்ளிட்ட பலன்களில் 90 சதவீதத்தை பிடித்தம் செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் நீதிபதி ஹுசைன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தனர். அப்போது ”நீதிபதிகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.:

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.