ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் தொடரும்: அமெரிக்கா, கனடா உறுதி| Dinamalar

வாஷிங்டன்: ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் தொடருமென அமெரிக்கா, கனடா நாட்டுத் தலைவர்கள் உறுதியான முடிவெடுத்துள்ளனர்.

உக்ரைன் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ரஷ்யப் படைகள் உக்ரைன் ராணுவத்துடன் போர் புரிந்து வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார்.

அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தன. போர் இன்னும் நீடிப்பதால் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இரு நாடுகளும் கடைபிடிக்க வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதி எடுத்துக்கொண்டனர்.

மேலும் வரும் ஜூன் மாதத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற உள்ள அமெரிக்க மாநாட்டில் இருவரும் பங்கேற்பது குறித்து விவாதித்தனர். அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளில் வசிக்கும் ரஷ்ய செல்வந்தர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கு பல்வேறு தடைகளை இரு நாடுகளின் அரசும் விதித்துள்ளன.

மேலும் இந்நாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டதன் காரணமாக ரஷ்யா அத்தியாவசிய தேவைகளுக்கு தற்போது இந்திய ஏற்றுமதியை நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.