விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு : 2 காவலர்கள் கைது

Tamilnadu News Update : சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த 19-ந் தேதி தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற விக்னேஷ் என்ற இளைஞர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதில் அவரது உடலில் காயங்கள் இருந்தாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதான் காரணமாக அவர் உயிரிழந்தாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் விக்னேஷின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசியல் கட்சியினரும் களத்தில் இறங்கியதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசு மரணமடைந்த விக்னேஷின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதி உதவியும் அளித்தது. மேலும் விக்னேஷின் மரணம் தொடர்பான விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்தார்.

இந்நலையில், விக்னேஷின் மரணம் தொடர்பான வழக்கில், தலைமை செயலக காலனி காவல் நிலைய எழுத்தது முனாஃப், காவலர் பவுன்ராஜ் உள்ளிட்ட 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில காவலர்கள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.