இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்.!

இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது.

கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று நான்காவது ஆலை குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரத்தில் மீண்டும் தடுப்பூசி முகாம்கள் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.