உக்ரைனின் பாம்பு தீவுக்கு ஏவுகணைகளுடன் சென்ற ரஷ்ய போர் கப்பல் ஒன்றை ட்ரோன் விமானம் மூலம் மொத்தமாக அழித்துள்ளது உக்ரைன்.
குறித்த தகவலை காணொளி ஒன்றை வெளியிட்டு உக்ரைன் உறுதி செய்துள்ளது.
விமானங்களை தகர்க்கும் TOR ஏவுகணைகளுடன் குறித்த கப்பலானது ரஷ்ய துருப்புகள் வசம் சிக்கியுள்ள பாம்பு தீவிக்கு பயணப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே TB2 இராணுவ ட்ரோன்களை பயன்படுத்திய உக்ரைன், குறித்த கப்பலை மொத்தமாக தாக்கி மூழ்கடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கப்பலில் வீரர்கள் நடமாடுவதும், திடீரென்று ட்ரோன்களால் தாக்கப்படுவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
மேலும், பாம்பு தீவில் ரஷ்ய துருப்புகள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் கட்டிடம் ஒன்றையும் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கும் காட்சிகளும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
தாக்குதல் எப்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான உறுதியான தகவல் இல்லை என்றபோதும், தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் வீரர்கள் நடமாட்டம் பதிவாகியுள்ளது.
ரஷ்யாவின் அதி நவீன ஆயுதம் ஒன்றை நெப்டியூன் ஏவுகணையால் மொத்தமாக சிதைத்துள்ளதாக உக்ரைன் அறிவித்ததன் அடுத்த நாள், பாம்பு தீவில் ஏவுகணை விநியோகத்திற்கான கப்பலை தாக்கி மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.