சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 26, பெண்கள் 21 என மொத்தம் 47 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 23 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,353 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 15,850 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 68 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 478 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை தமிழகம் முழுவதும் 38,025 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினத்தைவிட இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.