தூத்துக்குடியில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்ட மகளை அவமானம் தாங்காமல் வெட்டிக் கொன்ற பெற்ற தந்தை.!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத்தினருக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மகளை, அவமானம் தாங்காமல் பெற்ற தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவர் தனது மகள் மீனாவை 17 வயதிலேயே இசக்கிப்பாண்டியன் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்துள்ளார். இசக்கிப்பாண்டியன் – மீனா தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேறொரு இளைஞரை குடும்பத்தினருக்குத் தெரியாமல் மீனா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மகளின் இந்த செயலால் பெருத்த அவமானமாக உணர்ந்த சுடலை முத்து, அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

10 மாத காலம் கழிந்த நிலையில், உறவினரைப் பார்க்க ஊருக்குச் சென்றுள்ளார் மீனா. தகவலறிந்து மீனாவின் தந்தை உட்பட உறவினர்கள் சூழ்ந்துகொண்டு அவரை திட்டித் தீர்த்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுடலைமுத்து, மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு மகளை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். மகளைக் கொன்றுவிட்டு தலைமறைவான சுடலைமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.