தேனீ கூடுகளால் மக்கள் அச்சம்| Dinamalar

திருக்கனுார் : கூனிச்சம்பட்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில் கூடு கட்டியுள்ள தேனீக்களால் மக்கள் அச்சமடைந்துள் ளனர்.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு துணை சுகாதார நிலையம் அருகே பொதுப்பணித்துறை மூலம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் வளாகத்தில் வளர்ந்துள்ள இலவம் மரத்தில் தேனீக்கள் மூன்று பெரிய கூடுகளை கட்டியுள்ளன.அதனை சில சமூக விரோதிகள் சீண்டுவதால், துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் நோயாளிகள், சாலையில் செல்லும் பொது மக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வரும் சூழ்நிலை உள்ளது.எனவே, தேனீக்கள் கூடுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.