வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: உக்ரைன் – ரஷ்ய போர் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடரும் நிலையில் ஏழு நாட்டுத் தலைவர்கள் விரைவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துவங்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்ய படைகள் போர் புரிந்து வருகின்றன. இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்ய விளாடிமிர் புடின் அரசுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல மேலை நாடுகள் இதன்காரணமாக ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடை விதித்துள்ளன. முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி அளித்து வந்தார். தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 1.3 பில்லியன் பவுண்டு மதிப்புடைய ராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு அளித்து தனது ஆதரவை தெரிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
விரைவில் ஏழு நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இது குறித்து விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement