பாண் விலையேற்றம்…போராட்டங்களை கட்டுபடுத்த குவிக்கப்படும் ராணுவம்!


ஈரானில் பாண்களின் விலையேற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை கட்டுபடுத்துவதற்காக பாதுகாப்பு படைகளை அந்த நாட்டு அரசாங்கம் குவித்துவருகிறது.

ஈரானில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மற்றும் பிற அத்தியாவசிய பொருள்கள் மீதான மானியத்தை அரசாங்கம் நீக்கப்போவதாக வெளியான தகவலை தொடர்ந்து, ஈரானில் பாண்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றத்தை தொடர்ந்து, ஈரானின் சோசங்கர்ட் மற்றும் இசே, குசெஸ்தான் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பொதுமக்கள் தீவிர போராட்டதை நடத்தி நிலையில், எண்ணெய் வளம் நிறைந்த மாகாணங்களில் போராட்டதை கலைப்பதற்காக துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை அந்த நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள் பயன்படுத்தினர்.

இந்தநிலையில், குசெஸ்தான் பகுதியில் அதிகரித்துள்ள பதற்றத்தால் போராட்டதை மேலும் வலுப்பெறாமல் கட்டுபடுத்த பாதுகாப்பு படைகளை ஈரான் அரசாங்கம் குவிக்க தொடங்கியுள்ளது.

மேலும் போராட்டம் தொடர்பான அறிவிப்பிகள் இணையத்தில் பரவ தொடங்கியதை அடுத்து, நாட்டின் குசெஸ்தான் உட்பட சௌசஞ்சர்ட், பெஹ்பஹான், அபாடன், அஹ்வாஸ் மற்றும் ஹமிதியே ஆகிய பகுதிகளில் இணையதள வசதியை முற்றிலுமாக நிறுத்திவைத்தும், இணையத்தின் வேகத்தை குறைத்தும் ஈரான பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாவு மானியத்தை திடீரென நிறுத்துவது அமைதியின்மையை ஏற்படுத்தும் என புரட்சிகர காவல்படையுடன் இணைந்த அரசு சார்பு மாணவர் சங்கமான பாசிஜ் ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை (Ebrahim Raisi) எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, வணிகங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை மாலை ஒரு சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, மாவு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் மீதான மானியத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: உலகின் 20 பணக்கார நாடுகளுக்கு… பருவநிலைகளுக்கான அமெரிக்க தூதர் புதிய வேண்டுகோள்

மேலும் அத்தியாவசிய பொருள்களுக்கான மானிய தொகையை நேரடியாக மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஊழலைத் தடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.