பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை கைது| Dinamalar

அரியாங்குப்பம் : மனநலம் பாதித்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவான தந்தை, 9 ஆண்டிற்கு பின் கைது செய்யப்பட்டார்.அரியாங்குப்பம் அடுத்து சின்னவீராம் பட்டினம் சாலையை சேர்ந்தவர் பீட்டர். 65; மரம் ஏறும் தொழிலாளியான இவர், கடந்த 2013ம் ஆண்டு, மனநலம் பாதித்த தனது 17 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கில், அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பீட்டர், தலைமறைவானார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.அதில் கிடைத்த தகவலின்பேரில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பீட்டரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.