சியோல் : தென் கொரிய அதிபராக யூன் சுக் யியோல் நாளை மறுநாள் பதவியேற்க உள்ள நிலையில், வட கொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது, பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வட கொரியா நேற்று மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து, தென் கொரியாவின் முப்படை தலைமை தளபதி நேற்று கூறியதாவது: வட கொரிய ராணுவம், மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதித்துள்ளது. நாட்டின் கிழக்கில், சின்போர் துறைமுக நகருக்கு அருகே உள்ள கடல் பகுதியில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஏவுகணை சோதனையை, ஜப்பான் ராணுவ அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது. இதையடுத்து எந்தவித சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி, ராணுவ அதிகாரிகளுக்கு, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சியோல் : தென் கொரிய அதிபராக யூன் சுக் யியோல் நாளை மறுநாள் பதவியேற்க உள்ள நிலையில், வட கொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது, பதற்றத்தை அதிகரித்துள்ளது.வட கொரியா நேற்று மீண்டும் ஒரு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.