ஒற்றை யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி என சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வசித்து வருபவர் முருகன். இவர் அங்குள்ள பவானி எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் எஸ்டேட் பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அங்கு முருகன் செல்லமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில் அந்த பகுதியில் வந்த யானை தாக்கி முருகன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.