ரவுடிகள் வீடுகளில் அதிரடி சோதனை முன்னெச்சரிக்கையாக 9 பேர் கைது| Dinamalar

புதுச்சேரி : ரயில் பாதையில் வெடிகுண்டுகள் பதுக்கிய சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 பேரை கைது செய்தனர்.புதுச்சேரி காராமணிக்குப்பம் ரயில் பாதையில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். 5 வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனியர் எஸ்.பி.,தீபிகா உத்தரவின்பேரில் ரவுடிகள் தடுப்பு படை எஸ்.பி,,சுபம் சுந்தர் கோஷ் தலைமையில், உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று உருளையன்பேட்டைக்கு உட்பட்ட ஆட்டுப்பட்டி, ரோடியர்பேட் பகுதிகளில் உள்ள 16 ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு, ஆயுதங்கள் உள்ளதா என அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது 9 ரவுடிகள் சிக்கினர். அவர்களை கைது செய்து, விசாரித்தனர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை தோறும் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும். தற்போது செய்யும் தொழிலை தெரியப்படுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.