வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! – நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவியது.

சியோல்,
வடகொரியா சனிக்கிழமையன்று பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யூன் சுக்-யோல் பதவியேற்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் செலுத்தியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் இது குறித்த தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.