Tamil News Today Live: வங்கக்கடலில் உருவானது ‘அசானி’ புயல்

Tamil Nadu News Updates: இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம். தடுப்பூசி செலுத்தாதோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது

இன்று உருவாகிறது அசானி புயல்

அந்தமானை ஒட்டிய வங்கக்கடலில் இன்று உருவாகிறது அசானி புயல். தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

6 போலீசாருக்கு நீதிமன்றக் காவல்

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 போலீசாருக்கு 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல். 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் தொடர்ந்து 32வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.100.94-க்கும் விற்பனை

நடாலைத் தொடர்ந்து ஜோகோவிச்சை வீழ்த்திய 9 வயது அஸ்காரஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி. நடாலைத் தொடர்ந்து ஜோகோவிச்சை வீழ்த்தினார் 19 வயது அஸ்காரஸ்

Live Updates
09:38 (IST) 8 May 2022
பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி – தருமபுரம் ஆதீனம்

பட்டினப்பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழி அனுமதி வழங்கியதாக தருமபுரம் ஆதீனம் பேட்டி. நேற்று பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்த நிலையில் தருமபுரம் ஆதீனம் தகவல்

09:25 (IST) 8 May 2022
இந்தியாவில் மேலும் 3,451 பேருக்கு கொரோனா

இந்தியாவில் மேலும் 3,451 பேருக்கு கொரோனா தொற்று. 40 பேர் உயிரிழப்பு. கொரோனாவில் இருந்து மேலும் 3,079 பேர் குணமடைந்தனர். தற்போது,நாடு முழுவதும் 20,635 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

09:01 (IST) 8 May 2022
வங்கக்கடலில் உருவானது ‘அசானி’ புயல்

வங்கக்கடலில் உருவானது ‘அசானி’ புயல். அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே மே 10ல் ’அசானி’ புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

08:39 (IST) 8 May 2022
சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை – கார் ஓட்டுநர் கைது!

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை படுகொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்

08:39 (IST) 8 May 2022
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு. ஆந்திரா மற்றும் ஓடிசா நோக்கி புயல் நகரும் என தகவல்

08:25 (IST) 8 May 2022
நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது: எல்.முருகன்

உள்ளாட்சி வரி விதிப்பிற்கும் மத்திய அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிலக்கரி தட்டுப்பாடு என்பதே கிடையாது. மாநில அரசுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

07:58 (IST) 8 May 2022
முதல் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் இன்று முதல் மே 22 வரை நடைபெறவுள்ளது. 234 தொகுதியிலும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

07:56 (IST) 8 May 2022
தக்காளி காய்ச்சல் – 85 குழந்தைகள் பாதிப்பு

கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை வைரசால் பொதுமக்கள் பீதி; தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ள நோயால் இதுவரை 85 குழந்தைகள் பாதிப்பு

07:51 (IST) 8 May 2022
இன்று முதல் செஸ் ஒலிம்பியாட் பயிற்சி முகாம்

மாமல்லபுரத்தில் இன்று முதல் 15ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் பயிற்சி முகாம். 44வது செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 முதல் ஆக.10ம் தேதி வரை நடைபெறும். இஸ்ரேல் செஸ் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் ஜெல்ஃபாண்ட் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு பயிற்சி அளிக்கிறார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.