இலங்கை எம்.பி அடித்துக் கொலை.. போராட்டக்காரர்கள் ஆவேசம்..!

இலங்கை எம்.பி அடித்துக் கொலை

இலங்கையின் நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலாவின் காரை வழிமறித்தனர்

போராட்டக்காரர்களை நோக்கி காரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலா துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேருக்கு காயம்

மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்த ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் வந்தவர்களை தாக்கினர்

போராட்டக்காரர்கள் தாக்கியதில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலா உயிரிழந்ததாக போலீசார் தகவல்

இலங்கையில் மொரட்டுவா, குருனேகலா நகர மேயர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு

இலங்கை அரசுக்கு எதிராக பல ஊர்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை மூண்டுள்ளது

அரசுக்கு ஆதரவானவர்களின் வீடுகள், வாகனங்களை குறி வைத்து தாக்குதல்கள் நடைபெறுவதாக தகவல்

மொரட்டுவா நகர மேயர் சமன்லால் பெர்ணான்டோ வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல், தீ வைப்பு

குருனேகலா மேயர் துஷார சஞ்சீவா வீட்டின் மீதும் தாக்குதல் நடத்திய கும்பல் தீ வைத்து கொளுத்தியது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.