உக்ரைனின் கடலோர நகரம் ஒடேசா மீது ரஷ்ய படைகள் தாக்குதல்.. குடியிருப்பு கட்டிடங்களின் மீது அடுத்தடுத்து 3 ஏவுகணை வீச்சு..!

உக்ரைனின் கடலோரத்தில் அமைந்துள்ள ஒடேசா நகரில் குடியிருப்பு கட்டிடங்களின் மீது ரஷ்ய படைகள் அடுத்தடுத்து 3 ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

கருங்கடலையொட்டி உள்ள துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகை வெளியேறியது.

இந்த சம்பவத்தில் உயிர்சேதம் குறித்து முழுமையான தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், சேதமடைந்த கட்டிடங்களில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.