ஊரடங்குச்சட்ட காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும்

ஊரடங்குச்சட்ட காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டுமென பொலிசார் அறிவித்துள்ளனர்.

ஊரடங்குச்சட்டத்தை மீறுவது பொது அமைதியைப் பேணுவதற்கு தடங்கலாக கருதப்படும். இதனடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள மதுபான நிலையங்கள் ஊரடங்குச்சட்டம் முடிவுக்கு வரும் வரை மூடப்பட வேண்டுமென மதுவரி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.