ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்; தமிழுக்கு முன்னுரிமை – தமிழிசை உறுதி

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில், வெளியிட்ட சுற்றறிகையில், ஆவணங்கள் ஹிந்தியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டதைக் கண்டித்து புதுச்சேரி திமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில், இந்தி திணிக்கப்படுவதைக் கண்டித்து புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக உள்ள திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு முன்னதாக, ஜிப்மரில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை என்றும், பிராந்திய மொழியான தமிழுக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் வலியுறுத்தினார்.

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சமீபத்திய சுற்றறிக்கையில், பதிவுகளில் ஹிந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி திமுகவின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சிவா தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜிப்மர் சுற்றறிக்கைகளிலும் பதிவுகளிலும் இந்தியைப் பயன்படுத்துவது குறித்து முதன்மை நிறுவனம் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு சில உள்ளூர் இளைஞர்கள் உட்பட போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களும் கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஜிப்மர் ஏற்கனவே உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை மறுத்து வருவதாகவும், தற்போதைய சுற்றறிக்கையில் இந்தி மொழியை பயன்படுத்துவதற்கு உத்தரவிட்டிருப்பது உள்ளூர் மக்களுக்கு மற்றொரு அடியாகும் என்றும் சிவா குற்றம் சாட்டினார்.

“ஜிப்மர் வெளியிட்ட அந்த சுற்றறிக்கை நிபந்தனையின்றி திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று போராட்டத்தில் கூறினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான டி.வேல்முருகனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, இது இந்தி திணிப்பு என்று கூறினார். ஜிப்மருக்குச் சென்று இயக்குநர் ராகேஷ் அகர்வாலுடன் ஆலோசனை நடத்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “ஜிப்மர் நிறுவனத்தில் எந்த வகையிலும் இந்தி திணிப்பு இல்லை என்றும், தமிழ், மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்றும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், நான்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் ஒன்றிரண்டு இந்தியை திணிப்பதாக பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் கூறினார்.

“நோயாளிகள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளிலும் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சுற்றறிக்கை உள்ளது. எந்த வகையிலும் இந்தி திணிப்பு இல்லை.” என்று தமிழிசை சௌந்தரராஜன் உறுதி கூறினார்.

ஜிப்மர் ஒரு மதிப்புமிக்க நிறுவனம், குற்றச்சாட்டுகளைக் கூறி அதன் செயல்பாட்டில் ஒருவர் தலையிடக்கூடாது. இந்தி மட்டுமே தெரிந்த ஊழியர்களின் அனைத்து உள் விவகாரங்களுக்கும் மொழி தொடர்பான விருப்பம் இருப்பதாகக் கூறினார்.

“ஜிப்மரில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை, இந்த மருத்துவமனையை அணுகும் நோயாளிகள் தமிழில் தகவல்களைப் பெறுகிறார்கள். அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழி மற்ற மொழிகளுக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது. ஜிப்மர் எந்த பாகுபாடும் இல்லாமல் செயல்படுகிறது. அனைத்து போராட்டங்களும் தேவையில்லாதது” என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

மேலும், “ஜிப்மர் சேவைகள் எந்த விதமான இடையூறுகளையும் சந்திக்கக் கூடாது என்பதால், இதை அரசியலாக்கக் கூடாது. ஜிப்மரில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.