டெல்லி ஷாஹின்பாக் ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்.!

டெல்லி ஷாஹின்பாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியின் நடவடிக்கையைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஷாஹின்பாக்கில் சாலைகள் தெருக்களை ஆக்கிரமித்துக் கடைகள் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மாநகராட்சிக்குப் புகார்கள் வந்தன.

இந்நிலையில் இன்று பொக்லைன்கள், புல்டோசர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின்போது பாதுகாப்புக்காகக் காவல் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாநகராட்சியின் நடவடிக்கையைக் கண்டித்தும் பொக்லைன், புல்டோசர் வாகனங்களைச் செல்ல விடாமலும் அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.