தனியார் நிறுவன மானேஜர் | Dinamalar

புதுச்சேரி : தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்ற தனியார் நிறுவன மானேஜர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.முத்தியால்பேட்டை செயின்ட் ரொசாரியோ வீதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர்,48. இவர் பாரதி வீதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி அமலோற்பவமேரி கரோலின்,46; டைலர். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். தம்பதி நேற்று (8ம்தேதி) காலை 7.10 மணிக்கு தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்றனர். பிரார்த்தனை முடிந்து தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த போது அலெக்சாண்டர் திடீரென மயங்கி விழுந்தார்.உடனே அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அலெக்சாண்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.