தெலங்கானாவில் பயணிகள் வாகனம் மீது லாரி மோதி விபத்து… 9 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் பயணிகள் வாகனம் மீது லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் எல்லரெட்டி என்னும் ஊரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஒரு வாகனத்தில் நேற்றிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஹாசன்பள்ளி அருகே அவர்களின் வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதியதில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது மேலும் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரண்டு இலட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.