நடிகை பலாத்காரம் கைதாகிறார் நடிகர்| Dinamalar

திருவனந்தபுரம் : கேரளாவில், பாலியல் வழக்கில் சிக்கி உள்ள மலையாள நடிகர் விஜய் பாபுவுக்கு எதிராக, ‘கைது வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது, நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதுதொடர்பாக, விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, பாதிக்கப்பட்ட நடிகையின் அடையாளத்தை, சமூக வலை தளத்தில் வெளியிட்ட விஜய் பாபு மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது. அவருக்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டும், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். அவர் வெளிநாட்டில் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், விஜய் பாபுவுக்கு எதிராக, எர்ணாகுளம் நீதிமன்றம் நேற்று கைது, ‘வாரன்ட்’ பிறப்பித்தது. விரைவில், அவருக்கு எதிராக, ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.