பிரைம் டைம் பெருமாளு: அப்ப `கனா காணும் காலங்கள்' நடிகர், இப்ப மனைவிக்குத் தெரியாமல் ராபிடோ டிரைவர்!

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா… அக்னி நட்சத்திரம் எப்ப முடியும்னு இருக்கு” என்றபடி வந்தமர்ந்தார் பிரைம் டைம் பெருமாளு.

நாம் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. “இதமா ஒரு டம்ளர் மோர் இருந்தா நல்லா இருக்கும்” என்றார்.

“இந்த வாரம் குளிர்பானமெல்லாம் எதுவும் இல்லை” என்றோம்.

“புரியுது, போன வாரம் சொல்லாமக் கொள்ளாம ஆப்சென்ட் ஆகிட்டேன்னு கடுப்புல இருக்கீங்கனு தெரியுது. சீரியல் ரசிகர்கள்கிட்ட முதல்ல அதுக்கு எக்ஸ்க்யூஸ் கேட்டுக்கறேன். அலைபேசி சிக்னல் ஊடுருவ முடியாத ஒரு மலைச் சிகரத்துல லாக் ஆகிட்டதுதான் காரணம்” என்றவர், “பரவால்ல அடுத்த வாரம் டபுளாக் குடிச்சுக்கலாம்” என்றபடியே செய்திக்குள் நுழைந்தார்.

“பொழைக்கத் தெரிஞ்சு பொண்ணுனு அந்தப் பொண்ணைச் சொல்றாங்க. சிலரோ, ‘அந்தப் பொண்ணுக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாமே அவரது அம்மாவுடைய வழிகாட்டுதல்’னு சொல்றாங்க. எது உண்மையோ தெரியலை, ஆனா அடுத்ததுடுத்து வாய்ப்புகள் அமைஞ்சிட்டே இருக்கறதால ஷிவானி காட்டுல மழைதான்” என்றார்.

ஷிவானி நாராயணன்

“டீ டெய்ல் ப்ளீஸ்…” என்றோம்.

“‘விக்ரம்’ படத்துலயும் அடுத்து விஜய் சேதுபதி நடிக்க பொன்ராம் இயக்குகிற படத்துலயும் நடிக்கிற ஷிவானிக்கு இப்ப புதுசா தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஃப்ரெண்டா கிடைச்சிருக்கார்.

ஆர்.கே.சுரேஷை ஷிவானிக்கு அறிமுகப்படுத்தி வச்சது ‘பிக் பாஸ்’ பாலாதானாம். பாலாவுக்கு ஜாதிக் கட்சி ஒன்றில் பொறுப்பில் இருக்கும் அஜய் வாண்டையார்ங்கிறவர் ஃப்ரெண்ட். அந்த அஜய் வாண்டையார் ஆர்.கே.சுரேஷுக்கு ரொம்பவே நெருக்கமாம். இந்தத் தொடர்பு மூலமா இப்ப ஆர்.கே.சுரேஷுக்கு ஷிவானி அறிமுகமானாலும் ஆனார், சில தினங்களுக்கு முன்னாடி கடந்து போன ஷிவானியின் பிறந்த நாளை அமர்க்களப்படுத்திட்டாங்க ஆர்.கே.சுரேஷ் அண்ட் டீம்.

அதாவது ஷிவானியின் நிஜமான பிறந்த நாளுக்கு முந்தைய நாளே ஆர்.கே.சுரேஷின் ‘விசித்திரன்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் அமர்க்களப்பட்டிருக்கு. ஷிவானிக்கு அடுத்த பட வாய்ப்பும் அமைஞ்சிடுச்சு…” என ஷிவானி நியூஸை முடித்தார்.

“கனா காணும் காலங்கள்’ ஓ.டி.டி.யில் வெளியாகி இருக்கிறதே…” என்றோம்.

“ஆமா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த சீரியலையும் ஓ.டி.டி. தளத்துக்குக் கொண்டு வந்திருக்காங்க. என்ன ரிசல்ட் கிடைக்குதுங்கிறதைப் போகப் போகத்தான் தெரிஞ்சுக்க முடியும்.

இதே ‘கனா’ தொடர் சம்பந்தப்பட்ட இன்னொரு செய்தி இருக்கு. மனசை ரொம்பவே கனமாக்குது.

‘இப்ப ஒளிபரப்பாகிற ஓ.டி.டி. கனா காணும் காலங்கள்’ சீசன்லயோ, அல்லது விஜய் டிவி தன்னுடைய வேறு ஏதாவது சீரியல்கள்லயோ தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தந்தா, அது த‌ன்னுடைய குடும்பத்தை நல்லபடியா பாத்துக்க உதவும்’னு ‘கனா காணும் காலங்கள்’ காலேஜ் சீசன்ல நடிச்ச கணேஷ் பிரபு ரொம்பவே உருக்கமான ஒரு வேண்டுகோளை வச்சிருக்கார்.

ராஜபாளையம் பக்கத்துல இருந்து சினிமா, சீரியலுக்காக வந்தவர் இவர். பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட்ல நடிப்பெல்லாம் படிச்சவருக்கு ‘க.கா.கா.’ங்களுக்குப் பிறகு வாய்ப்புகளே அமையலை. ஆனாலும் இன்னும் மனசைத் தளர விடாமல் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கிட்டப் பேசினேன்.

‘கனா காணும் காலங்கள்’ கணேஷ் பிரபு

‘சில நேரம் கம்ப்ளீட்டா இந்த சினிமா எண்ணத்தைத் தூக்கி எறிஞ்சுட்டு வேற வேலைக்குப் போயிடலாமான்னு தோணும். அடுத்த சில நிமிடங்கள்லயே அந்த எண்ணம் காணாமப் போயிடுது. இதனாலயே கிட்டத்தட்ட இருபது வருஷமா போராடிட்டேதான் இருக்கேன். கல்யாணமாகி மனைவி. குழந்தைன்னு இருக்கறதால முழு நேரமும் சினிமாவுக்கான முயற்சியை மட்டுமே மேற்கொள்ள முடியலை. அவங்களுக்குமே என்னுடைய நிலைமை கஷ்டமா இருக்கு. ஆனா கூட சப்போர்ட் பண்றாங்க.

பல நாள்கள் சினிமாக் கம்பெனிக்குப் போறேன்னு மனைவிகிட்டச் சொல்லிட்டு ‘ராபிடோ’ டிரைவர் வேலைக்குப் போயிடுவேன். இப்படியே போயிட்டிருக்கிற இந்த நிலைமை ஒருநாள் மாறும்கிற நம்பிக்கை மட்டும் குறையலை’ங்கிறார்” என்ற பெருமாளு,

“கூல் ட்ரிங்க்ஸ் வேற இல்லையா, அதனால பசிக்கத் தொடங்கிடுச்சு, கிளம்பறேன்” என வண்டியைக் கிளப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.