பெண் மீது தாக்குதல் | Dinamalar

புதுச்சேரி : வம்பாகீரப்பாளையம் திப்புராயபேட்டையை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி அஞ்சலிதேவி,52. அதே பகுதியில் அஞ்சலி தேவியின் சகோதரர் செல்வம் வசித்து வருகிறார்.இவருக்கும், அஞ்சலிதேவியின் மற்ற சகோதரிகளான அமுதா, 52, மாலதி, 48, செல்வி, 53, ஆகியோர் இடையே சொத்து தகராறு உள்ளது.

செல்வத்திற்கு ஆதரவாக அஞ்சலிதேவி செயல்பட்டு வந்தார்.கடந்த 5ம் தேதி செல்வத்தின் மொபைல்போனில் தொடர்பு கொண்ட அமுதா, அஞ்சலி தேவியை தரக்குறைவாக பேசினார். இதனை ஜெய்சங்கர் கண்டித்தார்.அமுதா, மாலதி, செல்வி ஆகியோர் 6ம் தேதி அஞ்சலிதேவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மயக்கமடைந்த அஞ்சலிதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஒதியஞ்சாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.