மகன் போட்டோவை வெளியிட்டு காஜல் அகர்வால் உருக்கமான பதிவு

மும்பை: இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர், காஜல் அகர்வால். கடந்த 2020ல் தனது காதலர் தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டு மும்பையிலுள்ள சொந்த வீட்டில் குடியேறிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அதற்கு நீல் என்று பெயரிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று அன்னையர் தினத்தையொட்டி தனது மகனுடன் இருக்கும் முதல் போட்டோவை வெளியிட்டுள்ள காஜல் அகர்வால், இதுகுறித்து தெரிவித்துள்ள உருக்கமான பதிவு: இனி வரும் காலங்களில் ஒரு தாயாக உனக்கு நான் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுப்பேன். ஆனால், ஏற்கனவே நீ எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டாய். குறிப்பாக, தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்கு கற்றுக் கொடுத்துள்ளாய். என் இதயத்தின் ஒரு பகுதி, என் உடலுக்கு வெளியே இருக்கிறது என்பதை உணரச் செய்துள்ளாய். என் சிறிய இளவரசனே, நீ என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள் அனைத்தும் நீதான். அதை என்றும் மறந்துவிடாதே. நீ வலிமையானவனாக, அன்பானவனாக வளர்வாய் என்று நம்பி பிரார்த்தனை செய்கிறேன். நீ நம்பிக்கையுடன் அன்பாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டுகிறேன். அதை ஏற்கனவே உன்னில் பார்க்கிறேன். உன்னை என் மகன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.