மாஜி ரவுடி விகாஸ் துபேயின் ரூ. 67 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ : உ.பி.யில் கடந்தாண்டு என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபேயின் ரூ.67 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது.

உ.பி.,யில் கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபேயை, ஜூலை 3-ம் தேதி கான்பூர் அருகேயுள்ள கிராமத்தில் பதுங்கியிருந்தபோது, போலீசார் பிடிக்கச் சென்றனர். இதில் எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று, விகாஸ் துபே தப்பியோடினார்.

latest tamil news

போலீசார் தேடி வந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் ஜூலை 10-ம் தேதி போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில். கான்பூர் வரும் வழியில் தப்பியோட முயன்றதாக விகாஸ் துபேயை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் விகாஷ் துபே, அவரது மனைவி உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 12 இடங்களில் ரூ. 67 கோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அரசு முடுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.